Local

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையிலிருந்து பணமோசடி - முன்னாள் செயலாளரிடம் CID விசாரணை

Friday, 02 August 2024 - 10:40 pm

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை அவரது அனுமதியின்றி உபயோகித்துள்ள சந்தேக நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல முன்னிலையில் தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் விஷேட பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் நிரோஷன் லக்மால் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமது பிரத்தியேக பணியாற்றொகுதியில் பணிபுரிந்த முன்னாள் ஊடகச் செயலாளர் மகேஷ் விக்கிரம என்பவரே, தமது அனுமதியின்றி இந்த கடன் அட்டையை உபயோகித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமது தனிப்பட்ட பணியாற்றொகுதியில் பணியாற்றிய முன்னாள் ஊடக செயலாளரை பல்வேறு முறைகேடுகள் காரணமாக சேவையிலிருந்து நீக்கியதாகவும் முறைப்பாட்டாளரான அமைச்சர் தெரிவித்துள்ளதாக குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Top Stories
wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது

wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

எமது பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்த புத்தாண்டில் நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம்.

wedivistara

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

wedivistara

அமைச்சர் விஜிதவுக்கு பொருளாதாரம் தெரியவில்லை

wedivistara

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

Trending
wedivistara

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோருக்கிடையில் நிகழ்நிலை சந்திப்பு

wedivistara

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம் நடைபெற்றது


NEWS ALERT